வீட்டு கூரையை பிரித்து உள்நுழைந்த கொள்ளை கும்பல்! பணம் கொள்ளை..

ஆசிரியர் - Editor I
வீட்டு கூரையை பிரித்து உள்நுழைந்த கொள்ளை கும்பல்! பணம் கொள்ளை..

முல்லைத்தீவு - முள்ளியவளை - மாமூலை பகுதியிலுள்ள வீடொன்றில் 22.01.2022 நேற்று முற்பகல் வேளையில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் குடும்பத்தலைவன் கால்நடை வளர்ப்பிற்காகவும், மனைவி உறவினர் வீட்டிற்கும் சென்ற நிலையில், 

வீட்டில் எவருமில்லாத சமயம் வீட்டின் கூரையினைப் பிரித்து உள்நுழைந்து, வீட்டு அலுமாரியில் இருந்த ஒருஇலட்சத்து 90ஆயிரம் ரூபாய் பணம் 

திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸாருக்கு தாம் தகவல் வழங்கியதைத்தொடர்ந்து, 

பொலிஸார் நேரடியாக வீட்டிற்கு வருகைதந்து நிலைமைகளைப் பார்வையிட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து 23.01.2022 இன்று குறித்த வீட்டிற்கு தடயவியல் பொலிஸ் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தத் திருட்டுச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு