யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியின் அகலிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியின் அகலிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..!

யாழ்.ஸ்ரான்லி வீதியின் அகலிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராசாவின் தோட்டம் வீதியிலிருந்து முட்டாசுக்கடை சந்திவரையான வீதியில் வாகன நொிசல் மற்றும் போக்குவரத்து அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வாகன தரிப்பிடம் மற்றும் நடைபாதையுடன் கூடியதாக இந்த வீதி அகலிப்பு செய்யப்படவுள்ளது. 

காப்பெற் வீதியாக மாற்றம் செய்வதற்கான அளவீடுகள் இடம்பெற்றிருந்த நிலையில் வீதியின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் இராசாவின் தோட்டம் சந்தியிலிருந்து ஆரியகுளம் வரை செல்லும் இடைப்பட்ட வீதியில் பயணிக்க தடை விதிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு