அனைவரும் அணிதிரண்டு வாரீர்!: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

ஆசிரியர் - Admin
அனைவரும் அணிதிரண்டு வாரீர்!: தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு நாளை முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் அனைத்துத் தமிழ்மக்களையும் அணிதிரண்டு வருகை தந்து கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்று (30)விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,

தொழிலாளர் தின ஊர்திப் பேரணி மற்றும் பொது மக்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் பேரணி என்பன பருத்தித்துறை வீதியிலுள்ள சட்டநாதர் கோவிலடியில் பிற்பகல்-03 மணிக்கு ஆரம்பமாகிப் பருத்தித்துறை வீதி வழியாகக் கிட்டு பூங்காவை சென்றடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.

இனவழிப்புக்கு ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையூடாக விசாரணையை வலியுறுத்தியும், தமிழ்த் தேசமும், இறைமையும் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் அரசியல் விடுதலையை வென்றெடுக்கவும், தமிழ்த்தேசத்துத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிதல், இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி நடைபெறவுள்ள தொழிலாளர் தின நிகழ்வில் அனைத்துத் தமிழ்மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் குரல் கொடுப்போம்.

இலட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம். அணிதிரண்டு வாரீர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு