யாழ்.சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக 4 வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர், உட்பட 5 பேர் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் பகுதியில் தொடர்ச்சியாக 4 வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர், உட்பட 5 பேர் கைது..!

யாழ்.சுன்னாகம் நகர் பகுதியில் 4 இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த 3 சந்தேகநபர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் நடத்திய விசாரணைகளின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில், 

5 தங்கச் சங்கிலிகள் மீட்க்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது திருட்டு சம்பவம் தொடர்பில் சிசிடிவி கமரா பதிவுகளும் பார்வையிட்டு 

திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தலைமையிலான அணியினர் துரிதமாக செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் புத்தூர் கலைமதி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு