யாழ்.பருத்தித்துறை கடலில் 9 மீனவர்கள் கடற்படையினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடலில் 9 மீனவர்கள் கடற்படையினால் கைது..!

யாழ்.பருத்தித்துறை கடலில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலில் ஈடுபட்டிருந்த உடப்பு, சிலாபம், கற்பிட்டி பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

நேற்றய தினம் இரவு 4 படகுககளில் பயணித்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது, தடைசெய்யப்பட்ட வலைகள், மற்றும் 200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மற்றும், 4 படகுகளையும் கடற்படை கைப்பற்றியுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு