பாகிஸ்தானில் சாதித்த முல்லைத்தீவு யுவதி!! -தங்கப்பதக்கம் வென்று சாதனை-

ஆசிரியர் - Editor II
பாகிஸ்தானில் சாதித்த முல்லைத்தீவு யுவதி!! -தங்கப்பதக்கம் வென்று சாதனை-

பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை  போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் லாகூரில் நடந்த 25 வயதுக்குட்ப்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவின் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு