முகமாலை முன்னரங்க பகுதியில் மேலும் ஒரு மனித எலும்புகூட்டு எச்சம் அடையாளம் காணப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
முகமாலை முன்னரங்க பகுதியில் மேலும் ஒரு மனித எலும்புகூட்டு எச்சம் அடையாளம் காணப்பட்டது..!

முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணிகளின்போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

முகமாலை பகுதியில் மனித நேய கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டமையைடுத்து 

பளை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டு, 

குறித்த பகுதிக்கு இன்று (19) வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் 

அகழ்வு பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு