வரலாற்று சிறப்புமிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய பெருமஞ்ச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது..

ஆசிரியர் - Editor I

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூச திருநாளான நேற்று இரவு உலகப் பெரு மஞ்சம் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தவில் நாதஸ்வர கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த கந்தசுவாமியின் மஞ்சம் பவனி வந்தது.வள்ளி-தெய்வானை சமேதரராய் 

முருகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு