யாழ்.பருத்தித்துறை - கரணவாயில் மினி சூறாவளி தாக்கம்! 18 வீடுகள் சேதம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - கரணவாயில் மினி சூறாவளி தாக்கம்! 18 வீடுகள் சேதம்..

யாழ்.பருத்தித்துறை - கரணவாய் பகுதியில் சற்றுமுன் வீசிய மினி சூறாவளியினால் வீடுகள் சில சேதமடைந்துள்ளது. 

பாதிப்புகள் தொடர்பாக கிராம அலுவலகர்கள் சேத விபரங்களை சேகரித்து வருகின்றனர். கிடைக்கப் பெற்ற விபரங்களில் 

கரணவாய் தெற்கு ஜெ/348 கிராம அலுவலகர் பிரிவில் வீடொன்றின் கூரை வீழ்ந்துள்ளது. சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 

மோட்டார் சைக்கிள் மற்றும் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குமரிதோட்டம் பகுதியில் 5 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும், 

மற்றும் கரணவாய் மகா வித்தியாலய கூரையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன் கரணவாய் மத்தி ஜெ/350 கிராம அலுவலகர் பிரிவில் பலா மரங்கள், வாழை போன்ற மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், 

மூத்த விநாயகர் சந்தையில் உள்ள கடை ஒன்றின் தகரத்திலான கூரை சேதமடைந்துள்ளது. இவ்வாறு மினி சூறாவளி வீசியதில் 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக 

தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு