யாழ்.நாவற்குழியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கப் வாகனம்! விபத்தினால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்தடை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கப் வாகனம்! விபத்தினால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்தடை..

யாழ்.நாவற்குழி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த சம்பவம் இன்ற காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் சேதமடைந்த மின்கம்பம் அருகிலிருந்து ட்றான்ஸ் போமருடன் மோதி கம்பிகள் அறுந்துள்ளது. இதனால் தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கின்றது. 

மேலும் குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்தபோதும் அதில் பயணித்தவர்கள் ஆபத்தின்றி தப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு