யாழ்.ஊர்காவற்றுறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊர்காவற்றுறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

யாழ்.ஊர்காவற்துறையில் நேற்று (16) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையிலர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த உந்துருளியை செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு