13 வயது சிறுமியுடன் மிக இரகசியமாக குடும்பம் நடத்திவந்த 23 வயதான இளைஙன் கைது! திருகோணமலையிலிருந்து சிறுமியை கூட்டிவந்துள்ளார்..

ஆசிரியர் - Editor I
13 வயது சிறுமியுடன் மிக இரகசியமாக குடும்பம் நடத்திவந்த 23 வயதான இளைஙன் கைது! திருகோணமலையிலிருந்து சிறுமியை கூட்டிவந்துள்ளார்..

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் 13 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மாங்குளம் பகுதியில் உள்ள ரயர் கடை ஒன்றில் வேலை செய்வதற்காக திருகோணமலையினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலைதேடி வந்துள்ளார்.

இவர் தங்குவதற்காக மாங்குளம் புதிய கொலனி கிராம மட்ட அமைப்புக்களின் பரிந்துரையுடன் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில் 

திருகோணமலை மூதூர் பகுதியினை சேர்ந்த இளஞன் அதே பிரதேசத்தினை சேர்ந்த 13 அகவை சிறுமி ஒருவரை அவரின் விருப்பத்துடன் அழைத்துவந்து சுமார் ஒரு மாதகாலமாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். 

இந்த சிறுமி தொடர்பிலான தகவல் புதிய கொலனி பகுதியில் கிராமத்தில் தொியவந்த நிலையில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் திருகோணமலை மூதூர் பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய இளைஞனை 

மாங்குளம் பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் 13 அகவை சிறுமியினையும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்டமருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

இந்த சம்பவம் கடந்த 15.01.2022 அன்று இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட இளைஞன் 16.01.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதிபதி வாசல் தலத்தில் முன்னலைப்படுத்தப்பட்டபோது 

14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் திருகோணமலை மூதூர் பொலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு