யாழ்.மாவட்டத்தில் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்..!

யாழ்.மாவட்டத்தில் ஒமிக்ரோன் திரிபு வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பூஸ்டர் தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்தும் சிறப்பு நடவடிக்கையினை இராணுவம் முன்னெடுத்துள்ளது.

இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் பிரிவினரால்  யாழ்.கோட்டை பகுதியில் மூன்றாம் கட்ட பைசர்  தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் இன்று யாழ்நகரில்  முன்னெடுக்கப்பட்டது 

யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் நாட்டில் ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்டத்தில் ஓமிக்ரோன் தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக 

இராணுவத்தினரால்  மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி வழங்கும்  செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்.கோட்டைப் பகுதியில் முன்னெடுக்கப்படுகின்றது 

ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையிலும் பொதுமக்கள் மூன்றாம் கட்ட பைசர் தடுப்பூசியைப் பெறுவதில் தயக்கம் காட்டி வரும் நிலையில் இராணுவத்தினரால் குறித்த தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு