யாழ்.மாநகரசபையின் முத்தமிழ் விழா கோலாகல ஆரம்பம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபையின் முத்தமிழ் விழா கோலாகல ஆரம்பம்!

யாழ்.மாநகரசபையின் ஒழுங்கமைப்பில் முத்தமிழ் விழா இன்று காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணி மண்ணபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் தமிழ் கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பொய்க்கால் குதிரையாட்டம் மயிலாட்டம், 

கோலாட்டம் என்பனவற்றுடன் விருந்தினர்கள் யாழ்.மாநகர சபை முன்றலில் இருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது யாழ்.மாநகர சபையால் இயல்துறைக்கான அரசகேசரி விருது கவிஞர்.சோ.பத்மநாதனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டார். 

இந்த அமர்வில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் குழுவினரின் வழக்காடு மன்றம் விசேட அம்சமாக அமைந்துள்ளது.

ஐபிசி தமிழின் அனுசரணையில் காலை முதல் இரவு வரை இயற்துறை, இசைத்துறை, நாடகத்துறை என மூன்று அமர்வுகளாக நிகழ்ச்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இயற்துறை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு