யாழ்ப்பாணத்தில் கடலட்டை பிடித்த 21 பேருக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் கடலட்டை பிடித்த 21 பேருக்கு நீதிமன்றம் விதித்த அபராதம்..!

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்படுத்தப்பட்ட நிலையில், 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

பருத்தித்துறை நீதிமன்ற பிரதேசத்துக்குட்பட்ட கடல் பகுதிகளில் கடந்த ஆண்டு அனுமதியின்றி கடலட்டை பிடித்த 21பேருக்கு எதிராகவும் அவர்கள் பயன்படுத்திய 7 படகுகள் தொடர்பிலும் மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகளினால் 

நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ஆராய்ந்த பருத்தித்துறை நீதவான் பொ.கிருசாந்தன் 21 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் குற்றப்பணம் விதித்ததோடு 

படகு தொடர்பான உரிமைக் கோரிக்கையை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு