யாழ்.சாவகச்சோியில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன் மரணம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன் மரணம்..!

திடீரென மயங்கி விழுந்த சிறுவன் ஒருவன் சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளான். 

யாழ்.தென்மராட்சி - மந்துவில் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சத்தியராஜ் ஜானுசன் (வயது9) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். 

நேற்றய தினம் கோவிலுக்கு சென்றுவந்த குறித்த சிறுவன் திடீரென வாந்தி எடுத்துள்ளான். பின்னர் வீட்டுக்கு சென்ற நிலையில் மயங்கி விழுந்துள்ளான். 

இதனையடுத்து பெற்றோர் அவனை சாவகச்சோி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிறுவனை பாசோதித்த மருத்துவர்கள்

சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு