யாழ்.புத்துாரில் இரு சக்கர உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துாரில் இரு சக்கர உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பிள்ளைகளின் தந்தை பலி..!

யாழ்.புத்துார் பகுதியில் இரு சக்கர உழவு இயந்திரத்தில் உழுது கொண்டிருந்தபோது உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் உயிழந்துள்ளார். 

இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது, சம்பவத்தில் உயிரிழந்தவர் புத்தூர் - கலைமதி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னதம்பி தெய்வேந்திரன் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு