யாழ்.திருநெல்வேலி - ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி - ஆடியபாதம் வீதியில் ஒரு பகுதி ஒருவழி பாதையாக மாற்றப்படுகிறது!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்.திருநெல்வேலி சந்தைக்கு முன்பாகவுள்ள ஆடியபாதம் வீதியில் போக்குவரத்து நொிசலை தவிர்ப்பதற்காக வீதியின் ஒருபகுதியில் ஒருவழி பயணத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

13.01.2022ம் திகதி நாளை காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஆடியபாதம் வீதியில் அரசடி அம்மன் கோவில் சந்தியில் இருந்து திருநெல்வேலி சந்தி நோக்கிய பயணம் அம்மன் வீதி மற்றும் கலாசாலை வீதிக்கு திசைதிருப்பப்பட்டு 

திருநெல்வேலி சந்தியில் இருந்து கல்வியங்காட்டுச் சந்தி நோக்கிய பயணத்திற்கு மட்டும் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக நல்லுார் பிரதேசசபை தலைவர் ப.மயூரன் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு