யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவனின் இருப்பிடத்திற்குள் புகுந்து தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில், ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவனின் இருப்பிடத்திற்குள் புகுந்து தாக்குதல்! மாணவன் வைத்தியசாலையில், ஒருவர் கைது..

யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவத, கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று இரவு அந்த விடுதிக்குள் நுழைந்த இறுதி வருட சிங்கள மாணவர் ஒருவர், 

3வது வருட சிங்கள மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சிறிய பாதிப்பிற்குள்ளான 3வது வருட மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்திய இறுதி வருட மாணவன் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒரு மாதத்திற்குள் யாழ்.பல்கலைகழக விஞ்ஞானபீட சிங்கள மாணவர்களிற்கிடையில் நடந்த 3வது மோதல் சம்பவம் இதுவாகும்.சில நாட்களின் முன்னரும், விடுதிக்குள் நுழைந்து முதல் வருட மாணவரை, 3ஆம் வருட மாணவர் தாக்கியிருந்தார்.

தனது பகிடிவதை கட்டளையை மாணவன் உதாசீனம் செய்தார் என குறிப்பிட்டு, நள்ளிரவில் மதுபோதையில் பல்கலைகழக விடுதிக்குள் மதில் ஏறி குதித்து நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்தார்.

அந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, 3ஆம் வருட மாணவனை பல்கலைகழதத்திலிருந்து இடைநிறுத்தி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு