இரு குழுக்களுக்கிடையில் தகராறு! கோபத்தில் தள்ளியதால் நிலத்தில் விழுந்தவர் மரணம், 5 பேர் தலைமறைவு..

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் தகராறு! கோபத்தில் தள்ளியதால் நிலத்தில் விழுந்தவர் மரணம், 5 பேர் தலைமறைவு..

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நிவிதிகல - கிரிமடுவ பகுதியில் நேற்றய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஒருவரைத் தள்ளும் போது தவறி விழுந்ததன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக சந்தேகநபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் கீழ் நிவித்திகல, கிரிமடுவ லைம பகுதியைச் சேர்ந்த 77 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு