சஜித் பிறேமதாஸவுக்கு எங்கள் பிரச்சினை நன்றாக தொிந்திருக்கிறது..! எதிர்கட்சி தலைவருடனான சந்திப்பின் பின் யாழ்.மறைமாவட்ட ஆயர்..

ஆசிரியர் - Editor I
சஜித் பிறேமதாஸவுக்கு எங்கள் பிரச்சினை நன்றாக தொிந்திருக்கிறது..! எதிர்கட்சி தலைவருடனான சந்திப்பின் பின் யாழ்.மறைமாவட்ட ஆயர்..

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸ இன்று தனது பிறந்தநாளில் யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஆயர் இல்லத்தில் பிரேமதாசாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் ஆயரால் விசேட ஆசீர்வாத பூசை மேற்கொள்ளப்பட்டது. ஆயருடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர் புத்திக பத்திரன, இரான் விக்ரமரட்ன கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.மறைமாவட்ட ஆயர், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் இன்று என்னை சந்தித்து கலந்துரையாடினார். அவர் தன்னாலான முயற்சியினை மேற்கொண்டு 

அபிவிருத்தி வேலைகளை செய்து வருகின்றார். ஏற்கனவே எதிர்கட்சியில் இருந்தவர்கள் இவ்வாறு அபிவிருத்தி வேலைகள் செய்யவில்லை. ஆகவே அவருடைய அந்த பணியினை பாராட்டவேண்டும். 

எத்தனையோ வைத்தியசாலைகளுக்கு சிறுநீரக நோய்க்குரிய இயந்திர தொகுதிகளை வழங்கியுள்ளார். அத்தோடு பாடசாலைகளுக்கும் உதவிகள் வழங்கி வருகின்றார் சுகாதாரமும் கல்வியும் 

அவருடைய முக்கிய குறிக்கோளாக காணப்படுகின்றது. அவ்வாறு ஈடுபடும் அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுடைய பிரச் சினைகள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. 

நான் மூன்று விடயங்களை குறிப்பாக குறிப்பிட்டேன் அதாவது கல்வி மீன்பிடி விவசாயம் இந்த மூன்று துறைகளையும் வடக்கில் அபிவிருத்தி செய்ய வேண்டும் அத்தோடு இந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை 

ஒரு பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரினேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு