பிறந்து 52 நாட்களாக சிசு தாய்ப்பால் புரையேறியதால் மரணம்! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
பிறந்து 52 நாட்களாக சிசு தாய்ப்பால் புரையேறியதால் மரணம்! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டையில் பிறந்து 52 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறிய நிலையில் உயிரிழந்துள்ளது. 

நேற்றய தினம் அதிகாலை குழந்தை தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தைக்கு

மூக்கு வழியாக இரத்தம் வடிந்ததை பெற்றோர் அவதானித்த நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை சேர்க்கப்பட்டது. 

எனினும் குழந்தை இறந்துள்ளது. சம்பவம் தொடர்பான மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு