ஊழல் மற்றும் லஞ்சம் அற்ற நேர்மையான அரச சேவையாளருக்கான “நேர்மைக்கு மகுடம்” விருது யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவஸ்ரீக்கு..

ஆசிரியர் - Editor I
ஊழல் மற்றும் லஞ்சம் அற்ற நேர்மையான அரச சேவையாளருக்கான “நேர்மைக்கு மகுடம்” விருது யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவஸ்ரீக்கு..

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு  “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டிருக்கின்றது. 

ஊழல் மற்றும் லஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்கான விருதே தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியில் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு