யாழ்.சாவகச்சோியில் நஞ்சருந்திய 14 வயது சிறுவனுக்கு எதிராக வழக்கு பதிவு..!

ஆசிரியர் - Editor I

நஞ்சு திரவகம் அருந்திய 14 வயதுடைய மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக தொியவருகின்றது. 

மட்டுவில் பகுதியில் ஒரு மாணவன் உயிரை மாய்க்கும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் சாவகச்சோி மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டார். 

சிகிச்சையின் பின்னர் அவர் தேறிவரும் நிலையில் அந்த மாணவனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தொியவருகின்றது. 

பட்டாசு வெடித்தமைக்காக மாமன் கண்டித்ததால் கோபமடைந்த மாணவன் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த நஞ்சு திரவகத்தை அருந்தியதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு