யாழ்.கல்வியங்காடு வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய ரவுடி தெல்லிப்பழையில் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு வர்த்தகர் மீது தாக்குதல் நடத்திய ரவுடி தெல்லிப்பழையில் கைது..!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் புடவை கடை உரிமையாளர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதான ஒருவர் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் புடவை கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெல்லிப்பழையில் மறைந்திருந்த 24 வயதான ரவுடியை கைது செய்திருக்கின்றனர். 

குறித்த ரவுடிக்கு கொக்குவில் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புள்ளதாகவும், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

மேலும் காசு கொடுக்கல் வாங்கலே இந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு