யாழ்.மாதகல் கடலில் மீனவரின் படகு மீது மோதிய கடற்படை படகு! மீனவர் பரிதாபகரமாக மரணம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாதகல் கடற்பரப்பில் கடற்படையின் படகு மோதியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கின்றது. மாதகல் கடலில் படகு ஒன்றில் தனியாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 

மாதகல் குசுமந்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரின் கண்காணிப்பு படகே குறித்த மீனவரின் படகு மீது மோதியதாகவும் மீனவர் பயன்படுத்திய படகு 

முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு