இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கி சூடு! 22 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் துப்பாக்கி சூடு! 22 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் விசுவமடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் விசுவமடுவைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றே துப்பாக்கி பிரயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இன்று (11) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு