வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
வீடு புகுந்து குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு! படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

வீட்டுக்குள் நுழைந்த வாள்வெட்டு குழு ரவுடிகள் நடத்திய தாக்குதலில் குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் முள்ளியவளை - முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், அதேபகுதியை சேர்ந்த 42 அகவையுடைய தெய்வேந்திரம் புவனேந்திரராசா குமுழமுனை வீதி முறிப்பு பகுதியில் வீட்டில் வசித்து வந்த வேளை வீட்டிற்குள் புகுந்த நபர் வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதேவேளை இந்த வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு