மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்ட கணவன்!

ஆசிரியர் - Editor I
மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததை ஒப்புக் கொண்ட கணவன்!

முள்ளியவளை - பூதன்வயல் கிராமத்தில் கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவர் கொலையை தாம் செய்ததாக பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்கமூலம் வழங்கியுள்ளார். 

பெண்ணின் தலையில் காயம் காணப்பட்டதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா அறிக்கையிட்டுள்ளார். 

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் பெண்ணின் கணவர் குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திலுள்ள கிணறொன்றிலிருந்து 

நேற்றுமுன்தினம் 8ம் திகதி சனிக்கிழமை குடும்பப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த யோகராசா ராஜினி (வயது–39) இரண்டு பிள்ளைகளின் தாயாரே சடலமாக மீட்கப்பட்டார்.

கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் அவர் 4 நாள்களின் பின் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

குடும்பப் பெண் இரண்டாவது திருமணமாக ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தையடுத்து கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் குடும்பப்பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

பெண்ணின் தலையில் காயம் காணப்படுவதாகவும் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் பெண்ணின் கணவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர். அதன்போது மனைவியை தான்தான் கிணற்றில் தள்ளிவிட்டதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு