சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்! பொலிஸார் தீவிர விசாரணை..

பூதன் வயல் கிராமத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பூதன்வயல் பகுதியைச் சேர்ந்த, யோகராசா ராஜினி(வயது-39) என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா மற்றும், சட்டவைத்திய அதிகாரி, 

திடீர் மரணவிசாரணை அதிகாரி, தடயவியல் போலீசார், முள்ளியவளைப்போலீசார் ஆகியோர் வருகைதந்து தமது விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீநிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் குறித்த சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு 

மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை 

முள்ளியவளைப் போலீசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு