யாழ்.கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு! பட்டப்பகலில் 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அட்டகாசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு பகுதியில் வர்த்தகர் மீது வாள்வெட்டு! பட்டப்பகலில் 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அட்டகாசம்..

யாழ்.கல்வியங்காடு - சட்டநாதர் கோவிலடியை அண்மித்த பகுதியில் புடைவை வியாபாரி ஒருவர் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் காயமடைந்த வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. சட்டநாதர் கோவிலுக்கு சென்றுவிட்டு வர்த்தக நிலையத்திற்கு சென்றபோதே 

இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அண்மையில் யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு