பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது! சிவாஜிலிங்கத்தை எச்சரிக்கிறார் ஆளுநர்..

ஆசிரியர் - Editor I
பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது! சிவாஜிலிங்கத்தை எச்சரிக்கிறார் ஆளுநர்..

பேச்சு சுதந்திரம், இருக்க சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்காக தேச துரோக செயல்களுக்கு திறந்த உரிமை இருக்கிறது. என தவறாக நினைக்காதீர்கள் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர். 

இவர்களுக்காக பல இலட்சம் ரூபாக்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் தனது எரிபொருள் மற்றும் ரீசேட் கொள்வனவிற்காக பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் செலவிடுகின்றார்என தெரிவித்திருந்தார். 

அதற்கு பதில் அளிக்கும் முகமாக வடமாகாண ஆளுநர் செய்தி குறிப்பொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநரின் ஊழியர்கள் , 

மாகாண நியமன ஊழியர்கள் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். ஆளுநர் நீதியான சமுதாயத்தை நம்புகிறார். அதற்காக நேர்மையாக பணியாற்றுகிறார். இங்குள்ள சிலர் மாற்றுக்கருத்துக்களை கொண்டுள்ளனர். 

அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை சுதந்திரங்கள் உண்டு, அவற்றினை அவர்கள் தவறாக பயன்படுத்தகூடாது. அந்த சுதந்திரங்களை பயன்படுத்தி தேச துரோக செயல்களில் ஈடுபட முடியாது என தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு