கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு மோட்டார் சைக்கிள்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டிருக்கின்றனர். 

சில மாதங்களுக்கு முன்னர் சுன்னாகம் - அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், 

யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலானாய்வு பிரினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் குற்றச் செயலர்களுடன் தொடர்புடைய இரு மோட்டார் சைக்கிள்களையும் 

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் கைப்பற்றியிருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அந்த பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு