மனைவியின் ஆசையை நிறைவேற்ற நகை கொள்ளையடித்தவர் யாழ்.கோண்டாவிலில் சிக்கினார்!

ஆசிரியர் - Editor I
மனைவியின் ஆசையை நிறைவேற்ற நகை கொள்ளையடித்தவர் யாழ்.கோண்டாவிலில் சிக்கினார்!

நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்ற விசாரணை பிரிவு பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனது மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்த கொள்ளை சம்பவம் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் நடந்துள்ளது. நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். 

அந்த பெண்ணும் தண்ணீரை வழங்கியபோது அவர் அணிந்திருந்த இரண்டரை பவுண் தங்க நகைகை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். 

இது தொடர்பில் விசாரணைகளை நடத்திய வவுனியா பிரிவு குற்ற விசாரணை பிரிவினர் சந்தேகநபரை யாழ்ப்பாணத்தில் கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணம் கோண்டாவிலை சேர்ந்த 30 வயதானவரே சந்தேகநபர் என பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

சந்தேகநபர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் முடித்துள்ளார். நிரந்தர வருமானம் இல்லாமல் திண்டாடிய இவர் 

தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளார். என்பது விசாரணையில் தொியவந்துள்ளது. 

இவர் வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும் தொியவந்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு