யாழ்.போதனா வைத்தியசாலையில் நகைகளை பறிகொடுத்த பெண்! வைத்தியசாலை பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் நகைகளை பறிகொடுத்த பெண்! வைத்தியசாலை பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் எக்ஸ்றே எடுப்பதற்காக கழற்றிவைத்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வயோதிப பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

இன்றைய தினம் வியாழக்கிழமை, சிகிச்சையின் நிமித்தம், எக்ஸ்ரே எடுப்பதற்காக சென்றபோது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி, தனது கைப்பையினுள் (ஹாண்ட் பாக்) வைத்து சென்றுள்ளார்.

திரும்பிவந்து கைப்பையை பார்த்தபோது, அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையினை அவதானித்துள்ளதுடன் வைத்திய சாலை நிர்வாகத்திடம், முறையிட்டுள்ளார். 

இதனையடுத்து நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை

கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்திய சாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது. தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர், பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால், 

சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்திய சாலை நிர்வாகம் கோரியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு