400 கிலோ கிராம் நிறைகொண்ட மிக ஆபத்தான வெடிகுண்டுகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்த 6 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
400 கிலோ கிராம் நிறைகொண்ட மிக ஆபத்தான வெடிகுண்டுகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்த 6 பேர் கைது!

யுத்தத்தில் கைவிடப்பட்ட 2 வெடி குண்டுகளை பழைய இரும்புக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் 6 பேர் கைது செ்பட்டுள்ளனர். 

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்தே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 400 கிலோகிராம் எடைகொண்ட இரண்டு வெடிகுண்டுகளையும் 

சந்தேகநபர்கள் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைவேலி, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு