புகுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மற்றும் தாக்குதல்! விஞ்ஞான பீட மாணவருக்கு தடையுத்தரவு..!

ஆசிரியர் - Editor I
புகுமுக மாணவர்கள் மீது பகிடிவதை மற்றும் தாக்குதல்! விஞ்ஞான பீட மாணவருக்கு தடையுத்தரவு..!

யாழ்.பல்கலைகழகத்திற்குள் கட்டுப்பாடுகளை மீறியும் மிக மோசமான பகிடிவதை ஆங்காங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பகிடிவதையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் பல்கலைகழகத்திற்குள் நுழைய தடையுத்தரவு வழங்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் குறித்த மாணவனை உடனடியாக விடுதியில் இருந்தும் வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவன் ஒருவர் மீதே விஞ்ஞான பீடாதிபதியினால் இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், புதுமுக மாணவர்களைப் பகடி வதைக்கு உள்ளாக்கியதுடன் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குறித்த சிரேஷ்ட மாணவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள், 

மாணவர் நலச்சேவை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் முடியும் வரை குறித்த மாணவன் உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞான பீட பீடாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு