யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இல்லை! பொதுமக்கள் - ஒழுங்கமைப்பாளர்கள் சந்திப்பில் தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இல்லை! பொதுமக்கள் - ஒழுங்கமைப்பாளர்கள் சந்திப்பில் தீர்மானம்..

யாழ்.வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் பட்டத்திருவிழா நடத்தப்படும். 

அதேபோல் இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு 

பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் 

பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடைம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் படத்திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு