யாழ்.பருத்தித்துறையில் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை முயற்சியா? இல்லை என்கிறது பொலிஸ், ஆம் என்கிறார்கள் குடும்பத்தார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை முயற்சியா? இல்லை என்கிறது பொலிஸ், ஆம் என்கிறார்கள் குடும்பத்தார்..

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அல்வாய் பகுதியை சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் தனது மனைவியை தாக்கி படுகாயப்படுத்திய சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், 

குறித்த குடும்பஸ்த்தர் பொலிஸ் காவலில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். எனினும் குறித்த நபர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

இதற்கிடையில் பருத்தித்துறை நீதிபதி பொலிஸ் நிலையத்திற்கு சென்று குறித்த குடும்பஸ்த்தர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டு விசாரணைகளை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு