யாழ். நெடுந்தீவு கடலில் நடக்கவிருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டுள்ளது!

ஆசிரியர் - Editor I
யாழ். நெடுந்தீவு கடலில் நடக்கவிருந்த பயங்கரம் தவிர்க்கப்பட்டுள்ளது!

யாழ்.நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சமுத்திரதேவி படகு நடுக்கடலில் பழுதடைந்த நிலையில் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இன்று காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது. 

சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில் பயணிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகள் மத்தியிலும் வடதாரகைப்படகு இழுத்து செல்லப்பட்டது.

காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து சேர்ந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு