வடமாகாணத்தில் பனி அதிகரிப்பு, 9ம் திகதி தொடக்கம் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் பனி அதிகரிப்பு, 9ம் திகதி தொடக்கம் கனமழை! யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பிரதீபராஜா எச்சரிக்கை..

வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளது. எனினும் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானதுவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 

தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடையகூடிய சாத்தியகூறுகள் உள்ளன. 

அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுபடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு