பாடசாலை மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! யாழ்.வடமராட்சியயை சேர்ந்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலை மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! யாழ்.வடமராட்சியயை சேர்ந்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு..

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில்  கைதான யாழ்.வடமராட்சியை சேர்ந்த ஆசிரியரை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

பாடசாலை சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில் சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவிற்க கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடிப்படையாக கொண்டே ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 

விசாரணைகளின் பின்னர் 25.12.21 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை 04.01.2022 ஆம் திகதி நேற்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இந்நிலையில் மீளவும் நேற்றய தினம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்த முல்லைத்தீவு நீதிபதி குறித்த நபரை எதிர்வரும் 18-01-2022 வரை விளக்கமையலில் வைக்க உத்தரவிட்டதோடு 

வழக்கு விசாரணைகளை 18-01-2022 அன்றுக்கு தவணையிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு