புதுவருடத்தில் நடந்த கோர விபத்து! இருவர் பலி, ஆபத்தான நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

ஆசிரியர் - Editor I
புதுவருடத்தில் நடந்த கோர விபத்து! இருவர் பலி, ஆபத்தான நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வற்றாப்பளையிலிருந்து கேப்பாபலவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் எதிர் திசையில் வந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவத்தில் பிலக்குடியிருப்பை சேர்ந்த கி.மாரிமுத்து (வயது48) 

பிலக்குடியிருப்பை சேர்ந்த சூ.கரிதாஸ் (வயது17) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளதுடன் புதுக்குடியிருப்பை சேர்ந்த ச.நிறோஜன் (வயது 22) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதுடன் பொலிஸார் - பொதுமக்கள் இடையில் முறுகல் ஏற்பட்டது. 

எனினும் மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றது. மேலும் விபத்துக்குள்ளான டிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு