குளிக்க சென்றிருந்த நிலையில் காணாமல்போன 3 போில் 14 வயது சிறுமி சடலமாக மீட்பு! யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்...

ஆசிரியர் - Editor I
குளிக்க சென்றிருந்த நிலையில் காணாமல்போன 3 போில் 14 வயது சிறுமி சடலமாக மீட்பு! யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்...

நீர் வீழ்ச்சியில் நீராட சென்றிருந்த நிலையில் காணாமல்போன 3 போல் 14 வயது சிறுமி ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுமி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என கூறப்படுகின்றது. 

ஹெந்தலை மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 மற்றும் 29 வயதுடைய இருவரை கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள், தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குமாரி நீர்வீழ்ச்சியில் நேற்று மதியம் 3 இளைஞர்கள் மற்றும் 5 சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த போது கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது.இதன்போது 14,16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 

29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில் காணாமல்போயிருந்தனர் .இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது 

சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு