இருமல், தொண்டை வலியை குணமாக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ

ஆசிரியர் - Admin
இருமல், தொண்டை வலியை குணமாக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ

தேவையான பொருட்கள் :

டீத்தூள் - ஒரு டீஸ்பூன்,

 கற்பூரவல்லி - 5 இலை,

இஞ்சி - சிறிய துண்டு

எலுமிச்சை சாறு - தேவையான அளவு

தண்ணீர் - 2 கப்.

தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

கற்பூரவல்லி இலையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது டீத்தூளுடன், கற்பூரவல்லி இலை, இஞ்சி துருவல் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதித்து டீ ரெடியானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும்.

இப்போது கற்பூரவல்லி இஞ்சி டீ ரெடி.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு