திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிரதமர்!

ஆசிரியர் - Admin
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பிரதமர்!

இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று இந்தியா சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ஷ திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.     

அதனையடுத்து, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதையுடன் மகிந்த ராஜபக்ஷவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

சுவாமி தரிசனத்திற்கு பின்னர் மகிந்த ராஜபக்ஷ தங்க கொடி மரத்தை தொட்டு வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து ரங்கநாதர் மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைக்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்களை வழங்கினர்.

இன்று மாலை வரை திருமலையில் தங்கும் அவர் ஐந்து மணிக்கு மேல் புறப்பட்டு இலங்கை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு