வடக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடங்கள்!

ஆசிரியர் - Admin
வடக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடங்கள்!

வடக்கில் சீனாவும் இந்தியாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்.  இதனால் வட பகுதி மக்கள் அதிக நன்மைகளை அடைவார்கள் என நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.  வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 சிறிமாவோ பண்டார நாயக்க காலப்பகுதியில் இலங்கையானது சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது.  அவருடைய காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போதும் நடுநிலையாக செயற்பட்டு இருந்தது.  தற்போது சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடு நிலை காணப்படுவதில்லை.  அதனை நாம் ஜனாதிபதியுடன் பேசியே முடிவுகளை எடுத்து வருகின்றோம்.

 நாம் எந்த நாடுகளுக்கும் எமது பகுதிகளை விற்கவில்லை.  எந்த நாட்டுக்கும் சார்பாக செயற்படவும் இல்லை.  இயற்கையான பகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் சில பகுதிகளை வழங்குகின்றோம்.  இதனால் எமது மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.  வடக்கில் இந்தியாவும், சீனாவும் அபிவிருத்திகளை மேற்கொள்ள இடங்களை வழங்கியுள்ளோம்.  இதனால் வட பகுதி மக்களுக்கு அதிக நன்மைகள் ஏற்படும்.

 கேஸ் சிலிண்டர் பிரச்சனை தொடர்பில் நாம் பேசியிருக்கின்றோம்.  தேவையான கேஸ் சிலிண்டர்கள் உள்ளன போதும் அதில் பிரச்சனைகள் உள்ளன.  அதனை பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பானதாக மக்களுக்கு வழங்க அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கை எடுப்போம்.

 யுகதனவி ஒப்பந்த விவகாரம் தொடர்பில் நாம் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.  அதற்கு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கவுள்ளது.  நாம் கூறியது போன்றே அது வரும் என நம்புகின்றோம்.  இந்த விடயத்தில் இரண்டு, மூன்று அணிகளாக செயற்படுவதைப் பார்க்கின்றோம்.  இருப்பினும் அரசாங்கம் என்று அது தொடர்பில் நாம் மீண்டும் கலந்துரையாடியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு