சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி..! பல கோணங்களில் தீவிர விசாரணை, சிறுமியின் இறப்புக்கான காரணம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
சடலமாக மீட்கப்பட்ட 12 வயது சிறுமி..! பல கோணங்களில் தீவிர விசாரணை, சிறுமியின் இறப்புக்கான காரணம் வெளியானது..

முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பிறப்புறுப்பில் ஏற்பட்டிருக்கும் காயத்தினாலேயே உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யோகராசா நிதர்ஷனா (வயது12) என்ற சிறுமி கடந்த 15ம் திகதி தொடக்கம் காணாமல்போயிருந்த நிலையில் 3 நாட்கள் கடந்த 18ம் திகதி பற்றைக்குள்ளிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். 

சிறுமி காணாமற்போனார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பற்றைக் காணி ஒன்றிலிருந்து 18ம் ஆம் திகதி சடலமாகக் மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெற்றது.

சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட வைத்திய அதிகாரி அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்த நிலையில் சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டாரா? 

கருக்கலைப்புக்கு உள்படுத்தப்பட்டாரா? சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்டாரா? போன்ற கோணங்களில் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர். 

மேலும் சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு