இராமர் பாலத்தை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகள் சிலவற்றையும் நோட்டம் விட்ட சீனா துாதுவர்..!

ஆசிரியர் - Editor I
இராமர் பாலத்தை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகள் சிலவற்றையும் நோட்டம் விட்ட சீனா துாதுவர்..!

வடமாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த இலங்கைக்கான சீனா துாதுவர் Qi Zhenhong யாழ்.மாவட்டத்திலுள்ள தீவு பகுதிகளையும் கடல்வழியாக அவதானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மன்னார் - தாழ்வுபாடு பகுதியிலிருந்து இராமர் பால மண் திட்டுக்களை பார்வையிட சென்றிருந்த சீனா துாதுவர் Qi Zhenhong  திரும்புகையில் யாழ்.மாவட்டத்தில் சீனா மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்த திட்டங்களை மேற்கொள்வதற்கு

திட்டமிட்டிருந்த 3 முக்கிய தீவுகளையும் பார்வையிட்டு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறப்பாக சீனா துாதுவர் Qi Zhenhong ன் இராமர் பாலத்தை பார்க்க சென்றிருந்தபோது கடற்படையினர் எடுத்துள்ள புகைப்படங்களில், 

நயினாதீவு அம்மன் ஆலயத்தின் கோபுரம் தொியும் காட்சி அதில் இடம்பெற்றுள்ள நிலையில் சீனா துாதுவர் யாழ்ப்பாணத்தின் முக்கிய தீவுகளை பார்வையிட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு