காணாமல்போயிருந்த 12 வயதான சிறுமி பற்றை காணியிலிருந்து 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த 12 வயதான சிறுமி பற்றை காணியிலிருந்து 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு - மூங்கிலாறு பகுதியில் காணாமல்போயிருந்த 12 வயதான சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

கடந்த 15.12.21ம் திகதி குறித்த சிறுமி காணாமல்போயுள்ளதாக, பொலீஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி 18.12.21 இன்று பற்றைக்காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். யோகராசா நிதர்சனா என்ற 12 வயதான சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலீஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் உடலத்தினை அயல் வீட்டவர்கள் கோழியினை காணவில்லை என தேடி சென்றபோதே அடையாளம் காட்டியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு